புதன், 20 ஜனவரி, 2010

punnagai

காய்ச்சல் தலைவலியுடன் 
மருத்துவமனையின் நீண்ட வரிசையில் 
காத்திருக்க நேர்கையில் 
சலிப்பில் சொன்னது மனது 
'ச்சே  என்ன மோசமான நாளிது".

"தயவுசெய்து நாட்களை பழிக்காதே நண்பா 
ஒவ்வொரு  மணித்துளியும் வரம் என்று
எனக்குதான் நன்றாகத் தெரியும் "
என்று தன் சிறு புன்னகையால் 
சொல்லாமல் சொன்னாள்
புற்றுநோய்ச் சிறுமி. 

1 கருத்து:

Asiya Omar சொன்னது…

கவிதை சிந்திக்கும் படி இருக்கிறது.பாராட்டுக்கள்.