மருத்துவமனையின் நீண்ட வரிசையில்
காத்திருக்க நேர்கையில்
சலிப்பில் சொன்னது மனது
'ச்சே என்ன மோசமான நாளிது".
"தயவுசெய்து நாட்களை பழிக்காதே நண்பா
ஒவ்வொரு மணித்துளியும் வரம் என்று
எனக்குதான் நன்றாகத் தெரியும் "
என்று தன் சிறு புன்னகையால்
சொல்லாமல் சொன்னாள்
புற்றுநோய்ச் சிறுமி.
1 கருத்து:
கவிதை சிந்திக்கும் படி இருக்கிறது.பாராட்டுக்கள்.
கருத்துரையிடுக